குடிகாரர்களின் கூடாரமாக மாறிய  டெலஸ்கோப்  பார்வை மையம்! வேடிக்கை பார்க்கும் வனத்துறை!

குடிகாரர்களின் கூடாரமாக மாறிய  டெலஸ்கோப்  பார்வை மையம்! வேடிக்கை பார்க்கும் வனத்துறை!

   கு.அசோக்,

   திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை பல்வேறு சுற்றுலாத் தலங்களை  கொண்டுள்ளது.   அதில் ஒன்று சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக டெலஸ்கோப் வீவ் எனப்படும் தொலைநோக்கி பார்க்குமிடம் கட்டப்பட்டது.

  வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்தப் பகுதியில் இருந்து பார்த்தால் திருப்பத்தூர் மாவட்டத்தையே கழுகு பார்வையில் பார்க்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்.

   ஆனால் அந்தப் பகுதியை சுற்றுலா விரும்பிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வனத்துறை பூட்டியே வைத்திருப்பதால் ஏலகிரிக்கு வரும் சுற்றுலா விரும்பிகளுக்கு இது போன்ற ஒரு இடம் இருப்பதே தெரியாத அளவிற்கு பாழடைந்து காணப்படுகிறது.

   இதனால் சமூக விரோதிகளுக்கும் குடிகார ஆசாமிகளுக்கும் ரொம்பவே வசதியாகிவிட்டது.

   பார் கூடாரமாக மாறி இருக்கும் இந்த பகுதியை மறுசீரமைப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். அந்த இடத்தை குடிமகன்களிடமிருந்து வனத்துறை மீட்டெடுக்க வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

  ஆனால் பொதுமக்களின் ஆசையை நிறைவேற்றாமல் வனத் துறை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. நீண்ட காலமாக இதே நிலைதான் தொடர்கிறதாம்..

  அது சரி,