மும்மொழி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர் கூட்டமைப்பு!

மும்மொழி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர் கூட்டமைப்பு!

 கு.அசோக்,

 மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இராணிப்பேட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

  அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 மத்திய அரசு தொடர்ந்து ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கடைப்பிடித்தால் மாணவர் அமைப்புகளின் சார்பில் போராட்டம் வலுப்பெறும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.