தேடி தேடி கொல்லப்பட்ட பா.ஜ.க.பிரமுகர்!

தேடி தேடி கொல்லப்பட்ட பா.ஜ.க.பிரமுகர்!

 ம.பா.கெஜராஜ்,

 திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் மர்ம நபர்களால் ஊத்தங்கரையில் பகுதியில் கொடூரமாக வெட்டி படுகொலை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கலிகண்ணன் (45) இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக இருந்து வந்தார்.

   இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேப்பாலம்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா கிரஷர் கம்பெனி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இன்று அதிகாலை கொடூரமாக மர்ம நபர்களால் கலிகண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

   இச்சம்பவம் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன், ஊத்தங்கரை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல அட்வின் நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   மேலும் இது குறித்து ஊத்தங்கரை போலீசார்  விசாரித்து வருகின்றனர்.மர்ம நபர்கள் கைவரிசையா அல்லது ஏற்கனவே சொத்து விரோதம் காரணமாக ஆறு வருடத்திற்கு முன்பு கலிகண்ணனை வெட்டிய நபரின் முன் விரோத செயலா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு.

  இவர் கடந்த ஒரு வருடமாக வீட்டிற்கு செல்லாமல் உயிருக்கு பயந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரைத் தேடி தேடி இன்று காலை கொடுரமான வெட்டுக்களுடன் கொலை செய்ப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபபரப்பை ஏற்படுத்தி உள்ளது.