வனவிலங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்றுங்க அய்யா!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
இதில் விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் வேளாண் உபகரணங்களை மாணிய விலையில் வழங்கவும் உரம் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் வனவிலங்குகள் பயிர்கள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பனைகளை அமைத்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என கோரினர்.
அவற்றைக் கேட்டுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, துணை இயக்குனர் கண்ணகி அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.