அம்மாடியோ 2 கோடியே 26 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்!கொள்ளைக்கார பெண் ஆபிசர் மீது வழக்கு!
ம.பா.கெஜராஜ்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. இவர் பொதுப்பணித்துறை வேலூர் மண்டல செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அந்தம்மா அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அவரது வேலூர் குவார்ட்டரஸ், ஓசூர் வீடு மற்றும் கார் ஆகியவற்றிலிருந்து 2 கோடியே 26 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
இதுபற்றின விவரம் வருமாறு,
ஓசூர் நேருநகர் பகுதியில் வசித்து வருபவர் சேபனா, இவர் பொதுப்பணித்துறையில் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பிரிவில் செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
அதாவது அரசு கல்வி நிறுவனங்களில் கட்டப்படும் கட்டுமான வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பில் சேங்ஷன் செய்யும் பணி. அதற்கு இந்தம்மா அளவுக்கு அதிகமாக கட்டிங் கேட்டு பெறுவது வாடிக்கையாம்.
குறிப்பாக இந்த கொள்ளைக்கார அலுவலர் வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளின் கட்டுமான பணிக்கான வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் வேலூரில் பணியாற்றி வருகிறார்.
6 மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் அளிப்பது, நிதியை ஒதுக்குதல் இவரது பணியாகும். இந்நிலையில் இவர் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலிசார், பெறுப்பு டி.எஸ்.பி.கிருஷ்ணகிரி கிருஷ்ணராஜன் தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினி, விஜி ஆகியோர் நேற்று நோட்டமிட்டனர்.
அப்போது சோபானா காரில் புறப்பட்டு ஓட்டல் ஒன்றின் அருகில் நிறுத்தியுள்ளார். அப்போது அவரை மடக்கிய லஞ்ச ஒழிப்பு போலிசார் 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். இது குறித்து மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் சி.முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளைக்கார அலுவலர் சோபனா மீது எஃப்.ஐ.ஆர்.ம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பில் சோதனையிட்ட போது அங்கு 15 லட்சத்து 80ஆயிரத்தையும், 3.லட்சத்து 92 ஆயிரத்துக்கான காசோலைகளையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது வீட்டில் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.,
மேலும் 11 வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 38 சவரன் தங்கம், 1.320கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அசையா சொத்துக்களின் டாக்குமென்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புலன் விசாரணையை கிருஷ்ணராஜன், சுல்தானா பாஷா, ரஜினி, விஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நன்றி;-ராஜ்குமார்,ஓசூர்.