வேலூர் கலெக்டர் பங்கேற்ற ஊர்வலம்!

 வேலூர் கலெக்டர் பங்கேற்ற ஊர்வலம்!

 கு.அசோக்

வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு

 வேலூர்மாவட்டம்,வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகிலிருந்து மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகமும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்  சுப்பு லெட்சுமி  தலைமைதாங்கி துவங்கி வைத்தார்.

  முன்னதாக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது, இதில் மேயர் சுஜாதா  சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

   நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி  கோட்டை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் குடும்ப கட்டுபாடு அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து போன்ற பல்வேறு துண்டு பிரசுரங்களை வழங்கியதுடன் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.