பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கூட்டாக அமுக்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

கு.அசோக்,
மகள் திருமணத்திற்கு பெற்ற கடனை அடைப்பதற்கு நிலத்தை அட கு வைக்க சென்ற போது நிலத்தை ஏமாற்றி கிரைய பாத்திரம் செய்து கொண்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என தம்பதியர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீகுளிக்க முயற்சி செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சௌக்கார் தெரு பகுதி சேர்ந்த சேகர்.
இவர் தனது மகள் திருமணத்துக்கு பெற்ற கடனை அடைப்பதற்காக செங்காடு கிராம பகுதியில் சொந்தமாக உள்ள 21/2 ஏக்கர் புன் செய் நிலத்தினை உத்திரம்பட்டு கிராம நில தரகர் தட்சிணாமூர்த்தி, பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர், குமரேசன் மற்றும் தங்கவேலு ஆகியோரிடம் அடமானம் வைப்பதற்கு அணுகினார்.
மூன்று நபர்களும் கூட்டு சதி செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை 15 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து கொள்வதாக கூறி படிப்பறிவில்லாத சேகரிடம் பொது அதிகாரம் பெற்று சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
நிலத்தை கிரைய பத்திரம் செய்து ஏமாற்றி உள்ளதாகவும் நிலத்தை ஏமாற்றிய நபர்களின் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஏமாற்றி பெற்றுள்ள கிரைய பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டு தர வேண்டும் கோரியுள்ளனர்.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது சேகர் மற்றும் அவரது மனைவி தங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
இதனை காவலர்கள் தடுத்து நிறுத்திய போது தம்பதியர்கள் தரையில் படுத்து உருண்டு கதறி அழுத காட்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதுபின்னர் காவல் துறையினர் தம்பதியரை சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.