இந்தியன் வங்கியில் மொபைல் பேங்கிங்! அப்பாடா சுடுமூஞ்சி ஆபிசர்களிடமிருந்து விடுதலை!

இந்தியன் வங்கியில் மொபைல் பேங்கிங்! அப்பாடா சுடுமூஞ்சி ஆபிசர்களிடமிருந்து விடுதலை!

 ஜி.கே.சேகரன்,

இந்தியன் வங்கியின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான சாந்தி லால் ஜெயின் நேற்று நிகழ்சி ஒன்றில் பேசினார்.

  அப்போது அவர் குறிப்பிடுகையில்,இந்தியன் வங்கி ஆண்டுக்கு 10 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது கொரோனா காலத்தில் நாங்கள் மக்களுக்கு பெரும் உதவி செய்து வங்கி ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றினார்கள்.

   அதில் 30 சதவிகிதம் பேருக்கு வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டது இதற்கெல்லாம் காரணம் வங்கி பண பரிவர்த்தனை தான் இதனை முற்றிலுமாக மாற்ற அதாவது டெபிட் கிரெடிக் கார்டுகள் குறிப்பிட்ட ஆண்டுகளில் காலவதியாகும்.

 தற்போது மொபைல் பேங்கிங்கை அறிமுகப்படுத்தபவுள்ளோம் இதன் மூலம் பணமில்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம் இது அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படும் மேலும் வங்கிகளுக்கு சென்று மக்கள் பணபறிமாற்றங்கள் அது குறித்த தகவல்களுக்காக அலைச்சல்கள் இருக்காது.

  தங்களின் கையிலேயே வங்கியை பயன்படுத்தலாம் நாட்டில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியன் வங்கி கிளைகளில் டிஜிட்டல் பண பரிமாற்ற முறை கடன் பெறுதல் போன்றவைகளும் டிஜிட்டலில்  படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளோம் காரணம் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ந்து வருகிறது அதற்கேற்றார் போல் நாமும் மாற வேண்டும் அப்போது தான் நமது வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மாணவர்களாகிய நீங்களும் சவால்களை எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென பேசினார்.

குறிப்பு:இந்தியன் வங்கியின் சத்துவாச்சாரி கிளையில் கவுண்டர் எண் 3 உள்ள அம்மணிக்கு ஏகப்பட்ட தெனாவட்டு. வயதானவர்கள் மற்றும் வங்கியின் நடைமுறை தெரியாதவர்களிடம் முகம் சுளித்து நடந்துக் கொள்வதோடு எழுத பேனா கேட்டால் கூட கொடுக்க மறுக்கிறாராம். அந்த வங்கியின் மேலாளர் அதற்கு மேல் அற்புதமாக செயல்படுகிறார். அவர் பெயருக்கு கடிதம் கொடுத்தால் வெளியே போய் கவுண்டரில் கொடு என்கிறார். அதனால மொபைல் பேங்கிங் வந்துட்டா இந்த சுடுமூஞ்சிகளை நாம் பார்க்க வேண்டியதாக இருக்காது அல்லவா?.