அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டுமாம்! ஆசைப்படும் பா.ஜ.க.!

அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டுமாம்! ஆசைப்படும் பா.ஜ.க.!

 ஜி.கே.சேகரன்,

  திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததால் அவர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் - பாஜகவினர் திமுக அரசு தொடர்ந்து கைது செய்ய கூடாது இது எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் செயல் - பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டியின் போது சொன்னார்.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் பாரதிய ஜனதா கட்சியின் வர்த்த பிரிவு வணிகர்கள் மாநாடு வர்த்தக பிரிவு மாநில செயலாளர் இளங்கோ தலைமையில் நடந்தது.

 பாஜக மாநில செயலாளர்கள் வெங்கடேசன், கார்த்தியாயினி, மாவட்டத் தலைவர் மனோகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் வி.கே சிங் மற்றும் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஜெகன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 இக்கூட்டத்திற்கு பிறகு மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக ஜனநாயக முறைப்படி செயல்படவிடாமல் தடுக்கிறது மீண்டும் ஒரு எமர்ஜென்சியை போல் தமிழகத்தை மாற்றுகிறது.

 செந்தில் பாலாஜி அமலாக்கதுறை கைது நடவடிக்கை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடந்தது இதில் பாஜகவுக்கு சம்பந்தம் கிடையாது.

 இந்த கைதிற்காக ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்கள் எல்லாம் கோவையில் கூட்டம் போட்டு பிரதமரை அவதூறாக பேசியது கண்டிக்கதக்கது.

 பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா அடுத்த ஆண்டு இருக்கமாட்டார்கள் என்று பேசியுள்ளார். திமுக ராஜா அவரே இங்கு இருக்கமாட்டார் அவர் திகார் சிறையில் தான் இருப்பார்.

 அமைச்சர் பொன்முடி நேற்று செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என கூறியுள்ளது. எனவே பொன் முடி தானாக ராஜனாமா செய்ய வேண்டும் அல்லது தமிழக அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

 மாநிலத்தில் கருத்து சுந்திரம் பறிக்கபடுகிறது சமூக வளைதலங்களில் கருத்துக்களை பதிவிடும் பாஜகவினர் திமுக அரசு கைது செய்வது கண்டிக்கதக்கது என்று கூறினார்.