எலெக்ட்ரிக் டாடா சியாரா அறிமுகம்!

எலெக்ட்ரிக் டாடா சியாரா அறிமுகம்!

  முகில்,

 ஜெயலலிதா போன்ற அரசியல் பிரபலங்களால் உபயோகப்படுத்தப்பட்ட டாடா சியேரா கார்  ஒரு காலத்தில் ரொம்பவே பிரபலம்.

நாளடைவில் அது காணாமல் போனது.

 இந்நிலையில் எலெக்ட்ரிக் திறனை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட டாடா சியாரா மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியாரா மாடலை மறுபடியும் அறிமுகப்படுத்தும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறது.

குறிப்பாக இந்த தடவை சியாரா மாடல் எலெக்ட்ரிக் வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமும் இதுதான். 2020இல் இந்த காரின் மாடல் விவரங்கள் ஒரு கான்செப்ட் வடிவில் தெரியப்படுத்தப்பட்டது. சியாரா மாடலை இரு வெர்ஷன்களில் சந்தையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த மாடல் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'பார்ன் எலெக்ட்ரிக்' பிளாட்பார்மில் தான் தயார் செய்யப்படுகின்றன. இது வருங்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிளாட்பார்மாக செயல்படவுள்ளதாகத் தெரிகிறது.

நெக்சான், டிகோர் போன்ற மாடல்களை ஐசி இன்ஜின் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என்றே தனித்துவமாக புதிய வாகன பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு வருகிறது.

 மார்க்கெட்டுக்கு வரட்டும் ஒரு ரவுண்டு போகலாம்.