நான் கோபுரத்தின் அடியில் கொட்டி கிடக்கும் செங்கல்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!!

நான் கோபுரத்தின் அடியில் கொட்டி கிடக்கும் செங்கல்! அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!!

ஜி.கே.சேகரன்,

   திமுக பொதுசெயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் சொந்த ஊரான காட்பாடி வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - என் வாழ்நாள் முழுவதும் திமுக என்று இருந்தேன் கட்சி எனக்கு உரிய அங்கிகாரம் வழங்கியது - அண்ணா நாவலர் பேராசிரியர் வகித்த பதவி அது கட்டி கிடக்கிற கோபுரங்கள் நான் கோபுரத்தின் அடியில் கொட்டி கிடக்கும் செங்கல் திமுகவில் உழைப்பவர்கள் உயர்வடையலாம் என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

 திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுகொண்ட பின்னர், காட்பாடிக்கு ரயிலில் வந்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.

   அமைச்சர் துரைமுருகன் திறந்தவெளி ஜீப்பில் நின்று மக்களை வணங்கியவாறு வந்தார்.  பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

  சித்தூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்த கட்சி நிர்வாகிகள் சால்வை மாலை அணிவித்து கௌரவித்தனர்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர் தொண்டர்கள் மத்தியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் திமுக துவங்கிய காலத்திலிருந்து அறிஞர் அண்ணா நாவலர்,பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அந்த பதவிகளை வகித்தனர். அவர்கள் கட்டி எழுப்பிய கோபுரம் நான் அதன் அடியில் கொட்டி கிடக்கிற செங்கல் நான்.

   என் வாழ்நாளில் எப்போதும் திமுக திமுக என்றிருப்பவன் ஆகவே எனக்கு உரிய அங்கிகாரத்தை வழங்கியுள்ளனர் அதை போல் நீங்களும் உண்மையாக  உழைத்தால் திமுகவில் உரிய பதவிகள் கிடைக்கும் என்று பேசினார்.