எப்போது கூப்பிட்டாலும் பேசுவேன்! புதிய எஸ்.பி.மணிவண்ணன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள், எப்போது கூப்பிட்டாலும் பேசுவேன் என்று பேட்டியளித்ததுடன், அவரது செல் எண்ணை அளித்தார்.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பதவியேற்றுகொண்டார்.
ஏற்கனவே இங்கு கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் கண்ணா, இ.கா.ப. அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்ட நிலையில் மணிவண்ணன் இன்று பதவியேற்றுகொண்டார்.
பின்னர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த மாவட்டத்தில் நான் ஏற்கனவே பணி புரிந்துள்ளதால் இந்த மாவட்ட பிரச்சணைகளை நன்கு அறிவேன்.
கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிப்போம் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய முயற்சிகள் செய்யபடும்.
போக்குவரத்தை சரி செய்ய ஏதாவது யோசனை இருந்தால் தெரிவிக்கலாம்.
மாதம் தோறும் செய்தியாளார்களை சந்திப்பதுடன், செய்தி தொடபுக்காகவே மாவட்டம் சார்பாக ஒரு போலிசை நியமிக்க உள்ளேன். என்னை எப்போது வேண்டுமானாலும் செல் போனில் அழைத்து பேசலாம் என்றார். கூடவே அவரது செல் எண்ணை அளித்தார்.
பேர்னாம்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் இறந்துவிட்டதாகவும், அந்த சங்கதிகளை மூடி மறைப்பதாகவும், அதே போல் செய்தியாளார்களுக்கு அளிக்கக்கூடிய தகவல்களை போலிசார் அளிக்க மறுப்பதுடன், கஞ்சா வழக்கு கைதிகளை அரெஸ்ட் காட்டும் போது அவர்களுக்கு மட்டும் ஏன் முகமூடி அணிவிக்கிறார்கள், தாங்கள் அழைத்தால் போனை எடுப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெப்பினர்.
நான் இப்போதுதானே பொறுப்பேற்றுள்ளேன், செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியவைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி.யை டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.