மாணவர்கள் போல் வேடமிட்டு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

மாணவர்கள் போல் வேடமிட்டு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

 ம.பா.கெஜராஜ்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், புதுச்சேரி திமுக எம் .எல் .ஏ.க்கள் மாணவர்கள் போல் வேடமணிந்து சட்டபேரவைக்கு வந்தனர்.

 புதுச்சேரி சட்டபேரவை இன்று நடைபெற்றது.

  6 மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை இன்று கூட்டப்பட்டு, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

   கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடைகளை விரைவில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தனர்.

   அவர்கள் பள்ளி மாணவர்கள் போல் புத்தக பையை தோளில் தொங்கவிட்டு வந்தனர். சபை கூடியதும் தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

  இந்நிலையில் சட்டசபை கூட்டம் 24 நிமிடத்தில் முடிவடைந்தது. சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இதைதொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

   திமுக எம் எல் ஏக்கள் மாணவர்கள் வேடமிட்டு வந்தது பார்போருக்கு சிரிப்பு வரவைத்தது.