சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி மேயர்!

சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி மேயர்!

கு.அசோக்,

 வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குழாய் புதைக்கும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.

 வேலூர் மாவட்டம்,வேலூர் மாநகராட்சியின் மேயர் சுஜாதா ஆனந்தன் மற்றும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆர்.டி.ஒ சாலை நீதிமன்ற சாலை உள்ளிட்ட பல இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

   பாதாள சாக்கடை பணிகள் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் சரிவர செய்யாமல் இருந்ததை அதிகாரிகளை அழைத்து விரைந்து முடிக்க உத்தரவிட்டதுடன் குழாய்கள் புதைக்கும் பணியையும் விரைந்து முடிக்கவும் பணிகள் முடிந்த பின்னர் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டுமென எடுத்து கூறினார்.

  சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதையும் மக்கள் எடுத்து கூறினார்கள். பணிகள் தரமாக செய்ய வேண்டுமெனவும் எடுத்து கூறினார்.