பாலம் பாலிடிக்ஸ் செய்த அதிமுக மா.செ. வுக்கு ஜாமின்!

நெல்சன்,
காட்பாடி பாலம் திறந்ததால் கைது செய்யப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வந்தார். அவருக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மக்கள் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்ததால், அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக மாவட்ட செயலாளர் அப்புவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதால் இன்று அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து சிறைவாசலில் உற்சாக வரவேற்பளித்தனர்