ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபர்! விபரீதத்தில் முடிந்தது!

ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபர்! விபரீதத்தில் முடிந்தது!

ம.ராஜ்குமார்,

  ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபரின் வாழ்க்கை விபரீதமாக முடிந்தது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 30). கோவை சீர நாயக்கன் பாளையத்தில் ராதாகிருஷ்ணன் தெருவில் தங்கி இருந்து எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.

  கடைசியாக கோவை நேதாஜி ரோட்டில் உள்ள தியேட்டரில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரக்ஷ்னி என்ற பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும் காதல் ஏற்பட்டது.

 அதுமட்டுமின்றி, பிரேம்குமார் ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதா என்ற திருமணமான பெண்ணையும் காதலித்து வந்தார்.

ஆனால் கவிதா  கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

  அப்படியிருக்க ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதாவை அடிக்கடி பிரேம்குமார் சந்தித்து வந்து உள்ளார்.

  அதற்கு வசதியாக காதலி ரக்ஷ்னியை மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டு பிரேம்குமார் கவிதாவுடன் கோவையில் உள்ள வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

  பிரேம்குமார் நடவடிக்கை மீது சந்தேகம் இரண்டு பெண்களுக்குமே டவுட்டு ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் போதே தனியாக சென்று செல்போன் பேசுறீயே என்ன விஷயம் என்று கேள்வியெழுப்பினர்.

 ஆனால் பிரேம்குமார் இருவரையும் சமாளித்து வந்து உள்ளார். ஆனால் பிரேம்குமாரின் இந்த காதல் இரு காதலிகளுக்கும் தெரியவந்தது.

 இதனால் ஒரு முடிவுக்கு வந்த பிரேம் குமுமார், ரக்ஷ்னியை போனில் அழைத்து¢ "நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ் என்று"கூறிவிட்டு பிரேம்குமார் போனை துண்டித்து விட்டார்.

   அதிர்ச்சடைந்த ரக்ஷ்னி மற்றும் கவிதா ஆகியோர் பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

   அதன் பிறகு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரேம்குமார் மின்விசிறியில் லுங்கியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சடைந்தனர்.

   இந்த சம்பவம் குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.