ஆம்பூர் விவசாயிகளை கலங்கடிக்கும் ஒற்றை யானை!

கு.அசோக்,
ஆம்பூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை பயிர்களை சேதம் செய்து அட்டகாசம், நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனை.கடந்த ஆண்டு இதே போல் விவசாய நிலங்களில் பயிர்களை சேதிப்படுத்தியதற்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம், கைலாஷகிரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட மலை பகுதியை ஒட்டியுள்ள பெங்கள மூலை என்ற பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் ஒறை யானை நுழைந்தது.
பின்னர் அங்குள்ள விவசாயிகள் ராஜேந்திரன், கேசவன், தரணிதரன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.
மேலும், தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பயிர்களை சேதப்படுத்தி உள்ளதை பார்வையிட்டு யானையின் வழித்தடங்களை தொடர்ந்து கண்காணித்து யானை மீண்டும் வராமல தடுப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை காலங்களில் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் வரும் யானை,சிறுத்தை ,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்வதால் வனத்துறையினர் வனப்பகுதிகளில் தொட்டிகளில் நீரை நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கும் அவர்கள், மேலும் இதே போல் கடந்த ஆண்டு அதே பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை யானை சேதப்படுத்தி விட்டு சென்றதற்கான விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.