மகளை ஹெலிகாப்டர் மூலம் மாமியார் வீட்டுக்கு அனிப்பிய பாசக்கார தந்தை!

மகளை ஹெலிகாப்டர் மூலம் மாமியார் வீட்டுக்கு அனிப்பிய பாசக்கார தந்தை!

வி.டி.வித்யா சாகர்,

திருமணம் முடிந்ததும் மகளை ஹெலிகாப்டர் மூலம் வீட்டுக்கு மாமியார் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார் ஒரு பாசக்கார தந்தை.

இது பற்றின விவரம் வருமாறு,

  ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் முக்குல துவாரக நாத். இவர் நகர்ப்புற வளர்ச்சி கழக தலைவராக உள்ளார். இவரது மகள் உஷா ஸ்ரீ. இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை திருமணம் நல்லபடியாக முடிந்தது.

  பின்னர் தனது மகள், மருமகனுடன் விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்க தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை துவாரக நாத் ஏற்பாடு செய்து இருந்தார்.

 அதன்படி திருமண சடங்குகள் முடிந்த பிறகு நேற்று மாலை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மணமக்களை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

   அவர்கள் விஜயவாடா சென்றதும் மணமகன் வீட்டார் ஆரத்தி எடுத்து அழைத்து சென்றார். பாசமான தனது மகளை மாமியார் வீட்டிற்கு தந்தை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  வசதி மட்டுமில்லீங்க, செலவு செய்யக்கூடிய மனசும் முக்கியம் அல்லவா?