போக்குவரத்து நெரிசலில் மக்கள்! ஓட்டல் நிர்வாகத்தால் சிக்கல்

போக்குவரத்து நெரிசலில் மக்கள்! ஓட்டல் நிர்வாகத்தால் சிக்கல்

  த.நெல்சன்

  ஆயுத பூஜையான நவராத்திரி தினங்களை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல குவிந்துள்ளார்கள். இந்நிலையில்  சென்னையில் உள்ள தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

   சனி ஞாயிறு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களான திங்கள் செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனை அடுத்து தென் மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் இருக்கும் போது மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர்.   தனியார் வாகனங்கள், கார்கள், பேருந்துகள் ஆகியவற்றில் சொந்த ஊருக்கு பொதுமக்கள் சென்று கொண்டிருப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்

  அதே போல் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலைமார்கம் முழுவது நெரிசலால் சிக்கின. குறிப்பாக வேலூர் நகரின் மையப்பகுதியான கிரீன் சர்கிளில் சுற்று புறம் முழுவதிலும் ஒரே நபருக்கு சொந்தமான ஓட்டல்கள் சாலையை மறித்துள்ளதால் மக்கள் நெரிசலில் சிக்கி அவஸ்த்தைபட்டு வருகிறார்கள்.