அம்மன் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் யார்?

கு.அசோக்,
அம்மன் ஆலயத்தில் மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இராணிப்பேட்டைமாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள மூல துர்கை அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவில் நவகிரக சிலைகள் மற்றும் கோவில் முன் பகுதியில் இருக்கும் சூலத்தை மர்ம நபர்கள் யாரோ உடைத்துள்ளனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காவேரிப்பாக்கம் போலீசார் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதபடிக்கு போலிசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.