அரசை மிரட்டும் கிராம உதவியாளர் சங்கத்தினர்!

கு.அசோக்,
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் பிச்சாண்டி தலைமையில் நடைபெற்ற இதில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து ஜிபிஎப் பெண்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், அரசாணை 33 ன் படி வாரிசுதாரர்களுக்கு பணியாணை வழங்கி வந்த உத்தரவினை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 26 ந்தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.