அடங்காத ஆட்டிறைச்சி விற்பனை!

அடங்காத ஆட்டிறைச்சி விற்பனை!

அடங்காத ஆட்டிறைச்சி விற்பனை!

  கு.அசோக்,

  திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அநாவசியமாக சாலையில் சுற்றித்திரியும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 ஆனாலும்,  ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூர் நகரின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகள் மற்றும் தேனீர் கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை திறந்துவைத்து வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

  மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

  ஆம்பூர் மோட்டு கொல்லை, ஜலால் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள்  சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும் பொது மக்கள் சாலைகளில் முக கவசம் அணியாமலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியும் சுற்றித் திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுகடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆம்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 250 கடந்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சாலைகளில் சுற்றித் திரிவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.