கடத்தல் மணலுக்கு லஞ்சம் கேட்ட நீர்வள அலுவலர்! வழக்கறிஞரிடமும் கறார்!

ம.பா.கெஜராஜ்,
வேலூரில் மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய ஆட்டோவை திரும்ப பெற நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றார் ஒரு வழக்காடி, அவரது பெயர் முருகன்.
அதற்காக ஒரு இளம் வழக்கறிஞர் சட்ட உதவிகளை செய்துள்ளார்.
அந்த பணிகளின் தொடர்ச்சியாக நீர்வளத்துறையின் வசம் உள்ள மணலை விற்பனை செய்த ரசீதை பெறுவதற்காக வழக்காடி முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். (அந்த ரசீதையும், நீதிமன்ற ஆணையையும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுத்தால் தான் வாகனம் ரிலீஸ் ஆகும்)
அப்போது மேற்படி துறையைச் சேர்ந்த ஒரு அலுவலர் ரூபாய் பத்தாயிரத்தை லஞ்சமாக கேட்டிருக்கிறார்.
இந்த தகவல் இளம் வழக்கறிஞரின் பார்வைக்கு போனதும், அவர் நீர்வளத்துறை அலுவலரை தொடர்பு கொண்டு, ஒரு மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனத்தை திரும்ப பெற ரசீது கேட்டால் நீங்கள் அதிகம் பணம் கேட்கிறீர்கள், ஒரு யூனிட் மணல் தானே சார், ஐந்தாயிரம் வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்ல, மறுமுனையில் அந்த அலுவலரோ, சார் நான் பணம் கேட்கவில்லை ஜீப்பில் வந்த அதிகாரி தான் கேட்டார். எல்லா இடத்திலும் தான் இது நடக்குது. போலிஸ்காருங்க வண்டியை பிடிக்கும் போது மணலை வாரிடுறாங்க. இப்படித்தான் போன் பண்ணி கேட்பீங்களா? எதுவாக இருந்தாலும் நேரில் வாங்க, எங்க அதிகாரி விரிஞ்சிபுரம் போயிருக்கார், காலையில் ஒன்பதரை மணிக்கு வந்தால் இருப்பார் என்று போன் இணைப்பை துண்டித்தார்.
இது குறித்து சம்மந்தப்பட்ட நீர்வள அலுவலர் பர்த்திபனிடம் பேசினோம், நான் எங்க பணம் கேட்டேன். பணம் வந்து செல்லான் கட்டனும் தானே. ஆபிசுல இருக்குறேன் சார் என்று போனை வைத்தார். பின்னர் மீண்டும் அவரே நம்மை தொடர்பு கொண்டு சார் நாங்க அவுங்க கிட்ட கேட்கவும் கூடாது, அவுங்க எங்ககிட்ட வரவும் கூடாதுங்க. விடுங்க நான் போலிஸ் ஸ்டேஷன்ல பேசிக்கிறேன் என்றார்.