பிப் 19-ல் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஆணையம் அறிவிப்பு!

ஆர்.ரஜேஷ்குமார்,
பிப்ரவரி மாதம் 19-ல் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது! நேற்று 25.01.2022 -ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது.
கொரோனா கால நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு, நல்லபடியாக தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதியளித்த பின்னரே இந்த தீர்ப்பு வெளியானது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அறிவித்து தேர்தல் பணியை ஆணையம் துவக்கியிருக்கிறது.
அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பிப்ரவரி 5 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும், மனு வாபஸ் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்தது.