அரசு பேருந்தில் சரக்கடிக்கும் மாணவிகள்! கிங் பிரஷர் பீர் குடித்தால் வாசனை வராதாம்!

எஸ்.முருகன்,
ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வகுப்புவரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் அவர்களுக்கு அரசாங்கம் மாதம் 1000/-ரூபாய் அளிக்கும் என்கிற உன்னதமான திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
வசதி வாய்ப்பு இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு இந்த திட்டம் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அப்படியிருக்க, மாணவிகள் சிலர் பேருந்தில் பள்ளிக்கூடம் சென்று வரும் போது பீர் குடிப்பது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸாப்பில் பரவி வருகிறது.
அதில் மூன்று நான்கு மாணவிகள் பீரை சிப் பண்ணி மாறி மாறி குடிக்கிறார்கள். அதில் ஒரு மாணவி அடியேய் கிங் பிரஷர் பீர் குடித்தால் வாசனை வாராதம் என்று கலாய்த்து மேலும் ஒரு சிப் அடிக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் வல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் தான் பீர் அருந்தி விட்டு அரசு பேருந்தில் அட்டகாசம் செய்தனர் என்கிற விவரம் வெளியாகியிருக்கிறது.
இதையெல்லாம் பார்த்தால் இந்த சமூகம் எங்கே செல்கிறது என்கிற கேள்வி எழுகிறது.
இந்த காட்சிகளை அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்ல பலரும் பார்க்கக்கூடும், இந்நிலையில் அவர்கள் தான் இது போன்ற மாணவிகளை சீர்படுத்த வேண்டும்.