மன்னார்குடி டி.எஸ்.பி.யை பாராட்டிய எஸ்.பி.!

க.பாலகுரு,
மன்னார்குடி பகுதியில் குட்கா வழக்கில் ஒருவர் கைது ரூ.31,000/- மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலா, கூலிப் போன்ற பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது பதுக்குதல், கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, மன்னார்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை செய்து வந்தனர்.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி செல்வக்குமார் என்பவர் ராவணன் தெரு, மன்னார்குடி என்பவர் தனது வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சுமார் 60 பண்டல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ¢ அதன் மதிப்பு ரூ.31,000/- ஆகும்.
போதை பொருட்களையும், அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தும். அதனை வைத்திருந்த செல்வக்குமார் என்பவரை கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட பணியினை சிறப்பாக மேற்கொண்டு, குட்கா பொருட்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட மன்னார்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தல், பதுக்குதல், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்கள்.