மாடு மேய்க்கும் பெண்ணை கட்டிபிடித்த திமுக பிரமுகரின் புள்ளிங்கோ!

சபரி.ஈஸ்வரன்,
மாடு மேய்க்கும் பெண்ணை கட்டிபிடித்த திமுக பிரமுகரின் பிள்ளை போலிசார் வழக்கு போட்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி வீரக்குடியில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் ஹரிகிருஷ்ணன் 25, அவரது தாயார் பாண்டியம்மாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நரிக்குடி அருகேயுள்ள வீரக்குடியைச் சேர்ந்த 27 வயது பெண் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலையில் தனியாக வீடு திரும்பினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 25, அந்தப் பெண்ணை பின்புறமாக சென்று கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அந்த பெண் சத்தம் போடவே தப்பினார். இதற்காக அப்பெண்ணை ஹரிகிருஷ்ணனின் தாயார் பாண்டியம்மாள் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த விஷயத்தில் நரிக்குடி போலீசார் தலையிட்டனர். பின்னர் ஹரிகிருஷ்ணன் மீதும், தாயார் பாண்டியம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை பெபெண்ணை ''புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுகிறார்களாம். ஆகவே பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஏதேனும் உயிர்புடன் இருந்தால் உதவலாம்.