இராணிப்பேட்டையில் பிளாஸ்ட்டிக் சாலைகள்! ஆட்சியர் தகவல்!

இராணிப்பேட்டையில் பிளாஸ்ட்டிக் சாலைகள்! ஆட்சியர் தகவல்!

ஜி.கே.சேகரன்,

  இராணிப்பேட்டை மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டி அரைத்து சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது - மூன்று சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் பழுது பார்க்கபடுகிறது ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்விற்கு பின்னர் பேட்டி.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, ஒன்றியம், காவேரிப்பாக்கம் ஒன்றியம் போன்ற பகுதிகளில் நடந்து வரும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

 இதில் பிளாஸ்டிக் அரவை செய்யும் இயந்திரத்தை பார்வையிட்டதுடன் சமத்துபுர குடியிருப்புகள் புணரமைப்பு பூங்காக்கள் புணரமைப்பு கிராமப்புற விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் இடங்கள் கழிவு நீர் சுத்தம் செய்யும் பகுதி போன்றவற்றை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

 இம்மாவட்டத்தில் தென் கடப்பந்தாங்கலில் ரூ.8 லட்சம் மதிப்பில் கிராமபகுதிகளில் சேகரிக்கபடும் நெகிழி கழிவுகளை கூழ் செய்து அவைகளை சாலைகள் அமைக்கும் பணிக்காக பயன்படுத்த மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.

 பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 அம்மூர்,பெரும்புலிபாக்கம், நெமிலி, ஆகிய மூன்று சமத்துபுரங்களில் பழுதடைந்த வீடுகள் மக்கள் தொடர்ந்து வசிக்கும் வகையில் ஒரு வீட்டிற்கு ரூ,.50 ஆயிரம் அரசு செலவிட்டு புதுப்பித்து தருகிறது.

 அத்துடன் இம்மாவட்டத்தில் விவசாயிகள் மரக்கன்றுகளை வளர்த்து பயன்பெறும் வகையில் மா கொய்ய முருங்கை உள்ளிட்ட பழம் மற்றும் பயன் தரும் வகையில் அவர்களுக்கு வழங்கி விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 மேலும் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைத்து வடிகால்கள் மூலம் நீரை மாசில்லாமல் மறு சுழற்சிக்கு அனுப்பு வைக்கிறோம் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

   இவைகளை தவிர குளங்களையும் அமைத்து வருகிறோம் இதன் மூலம் நீரும் தேக்கபடுகிறது இம்மாவட்டத்தை மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சொன்னார்.