நீதிமன்றத்தால் கழற்றிவிட்டப்படும் ஓ.பி.எஸ்.! நம்பிக்கைதான் வாழ்க்கை!!

நீதிமன்றத்தால் கழற்றிவிட்டப்படும் ஓ.பி.எஸ்.! நம்பிக்கைதான் வாழ்க்கை!!

ம.பா.கெஜராஜ்,

 அ.தி.மு.க.வின் மாற்று சக்தியாக உருவெடுத்த பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு வழியில் டிமிக்கி கொடுத்து வரும் நிலையில்,  அவருக்கு நீதிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொன்றாக எதிர்ப்பாகவே அமைந்துள்ளது.

 குறிப்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரைத் தவிர பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவிப்பதால் அவருக்கு சாதகமாகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்து வருகின்றன.

அதிமுகவின் பொருளாளர் நான் தான் என ஓபிஎஸ் கூறிவந்த நிலையில் வங்கி கணக்கை கையாள இபிஎஸ் தரப்புக்கு வங்கிகள் அனுமதியளித்துள்ளன.

பூட்டப்பட்ட அதிமுக அலுவலக சாவியையும் தரப்புக்கே தர சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் வாயிலாக, தேர்தல் ஆணையம் மூலமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்து வரும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அடுத்தகட்ட திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கலாம். ஏன்னா    நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும் கூட, கோடிக்கணக்கான தொண்டர்கள் நம் பக்கம் தான் என்று காட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டம் தீட்டுகிறாராம்.

  அந்த வகையில் ஓபிஎஸ் மதுரையில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அவரது பிரச்சார வாகனம் இனி அதிகமாக அணி வகுக்குமாம்.

  இது போன்ற பயணங்களில் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் மற்றொரு மகனான ஜெய பிரதீப்பையும் உடன்  அழைத்துச் செல்ல திட்டமாம்.,

  அப்படின்னா வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி என தனது ஆதரவாளர்களுடன் ப்ளஸ் தன் மகன்களின் எண்ணிக்கையையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

 என்ன செய்வது நம்பிக்கைத்தானே வாழ்க்கை.