அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய நறுவீ சம்பத்!

ம.பா.கெஜராஜ்,
அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு நறுவீ மருத்துவமனையின் நிறுவனர் முனைவர் ஜி.வி.சம்பத் பரிசுகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு செவிலியர் (B.sc., Nursing) மற்றும் 4 ஆம் ஆண்டு ANM துணை செவிலியர் துவக்க விழா நவைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்தி கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான சிறுநீரகவியல் நிபுணர் மரு.சொளந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இதில் கிளை தலைமை மருத்துவர் மரு.ஆ.கென்னடி முன்னிலை வகித்தார். அத்தி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நறுவீ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவருமான முனைவர் ஜி.வி.சம்பத் பங்கேற்று குத்து விளக்கேற்றினார்.
விழாவை தொடங்கி ணவத்து மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் மருத்துவ துறையில் மருத்துவரக்ளின் பணிக்கு இணையானது செவிலியரக்ளின் பணியாகும்.
மேற்குலக நாடுகளில் செவிலியரக்ள் பணியும் திறனும் அங்குள்ள இளநிலை மருத்துவரக்ளின் பணிக்கு நிகரானது. அது போன்று இங்குள்ள செவிலியரக்ளும் தங்களது சுய திறனை வளம்படுத்தி கொள்ள வேண்டும்.
செவிலியர் போல் எந்த துறையினராலும் சேவை செய்ய முடியாது. ஏனென்றால் மற்ற பணி செய்பவர்கள் ஊதியத்திற்காக பணிசெய்பவரக்ள்.
ஆனால் செவிலியர்கள் பணி அன்பு மற்றும் சேவை மனப்பான்மையோடு செய்வதாகும் என்று பேசினார். முன்னதாக கடந்த ஆண்டு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.தங்கராஜ், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.