எஸ்.பி.ஆபிஸ் முன்னர் போராட்டம் நடத்துவேன்! முன்னாள் அமைச்சர் வீரமணி பொங்கி எழுந்தார்!

எஸ்.பி.ஆபிஸ் முன்னர் போராட்டம் நடத்துவேன்! முன்னாள் அமைச்சர் வீரமணி பொங்கி எழுந்தார்!

  ஜி.கே.சேகரன்,

  அ.தி.மு.க.தலைமையின் உத்தரவுபடி பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி  மாநிலம் முழுவதிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

இதில் திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்பாட்ட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி கலந்துக் கொள்ளாமல் கழன்று கொண்டனர்.

  அப்படிப்பட்டவர் எஸ்.பி. ஆபிஸ் முன்னர் போராட்டம் நடத்தப்படும் என்று கெத்து காட்டியிருக்கிறார்.

  தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் நிலையில்  அதிமுகவினர் மீது தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிரு நாட்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் போரட்ட்டம் நடத்தப்படும்

- அதிமுகவில் சசிகலா இணைப்பு என்பதெல்லாம்  திமுக  கிளப்பிவிடும் பூகம்பம் - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.பேட்டி.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நடைபெற்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்து  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவை சேர்ந்த பேரூராட்சி செயலாளர்  சரவணன் கிளை செயலாளர்  பிரபு ஆகியோரை சந்தித்து   முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று  சந்தித்து நலம் விசாரித்தனர்.

   அதன்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி.உதயேந்திரம் பேரூராட்சி மன்றத் தலைவர் மறைமுகத் தேர்தலின் போது அதிமுகவின் வெற்றியை தடுக்கும் வகையில் திமுகவினர் உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராக்களை பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

  அதனை  தடுக்க முயன்ற அதிமுகவினரை தாக்கியது மட்டுமல்லாமல், திமுகவினர் காவல் துறையினரையும்  சட்டையை பிடித்து தாக்கியுள்ளனர்.

 அதிமுகவினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இது போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு காட்ட முடியுமா? திமுகவின் அராஜசெயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.இது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஓரிரு நாட்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன்.

  வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்க்ளில் சசிகலாவுக்கு ஆதரவில்லை இது திமுகவின் பொய் பிரச்சாரம் புதியதாக பூகம்பத்தை கிளப்பிவிடுகின்றனர் ஒ.பி.எஸ் தம்பி கட்சியில் என்ன பதவியில் இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை என்று கூறினார்.

குறிப்பு: மேற்படி  தேனி மாவட்ட ஆவின் தலைவர்,ஓ.பி.எஸ். ராஜா,  தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச்செயலாளர் வைகை கர்ருப்புஜி மற்றும்கூடலூர் நகர புரட்சித்தலைவி பேரவைச் செய்யலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் அ.தி.மு.க.வின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றனர்.