கடைசி மன்னன் கல்லரையில் சர்ச்சை! வாரிசுகள் போட்டி போட்டுக்கொண்டு அஞ்சலி!

கு.அசோக்
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்ரம ராஜசிங்கே நினைவு தினம் ராஜாவின் வாரிசுகள் இருபிரிவாக அஞ்சலி செலுத்தினர்.அடுத்த ஆண்டு முதல் இதனை தமிழக அரசு அரசு விழாவாக நடத்த கோரிக்கை
வேலூர்மாவட்டம், வேலூர் பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராஜசிங்கே குடும்பத்தினரின் கல்லறை உள்ளது. இதனை தமிழக அரசு முத்து மண்டபமாக கட்டி பராமரித்து வருகிறது. விக்கிரம ராஜசிங்கேவின் நினைவு தினத்தில் முத்து மண்டபத்தில் ராஜாவின் வாரிசுகள் மதுரையை சேர்ந்த அசோக் ராஜா ஒரு பிரிவாகவும், ஆந்திராவை சேர்ந்த பிருத்திவராஜன் மகன் புருஷோத்தம ராஜா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வந்த விவேக் ராஜா மற்றோரு அரசு வாரிசு ஒரு பிரிவாகவும் வந்தனர்.
அவர்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள், மேலும் பொதுமக்கள் தமிழார்வலர்கள் பல்வேறு சமுதாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனால் பரபரப்பு காணப்பட்டது. இதனிடையே ராஜாக்களின் வாரிசுகளிடையே குழப்பமும் பிரச்சணையும் ஏற்படுவதால் தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் இதனை அரசு விழாவாக நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜாவின் வாரிசுகள் இருபிரிவாக நினைவு தின அஞ்சலி செலுத்தியதால் காவல்துறையினரின் பாதுகாப்பும் போடாப்பட்டிருந்தது.