வாணிடெக் திறந்து விட்ட ராசாயன தண்ணீர் பாலாற்றில் கலப்பு! செத்து மடிந்த மீன்கள்!! வேடிக்கை பார்க்கும் மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,
வாணிடெக் என்கிற பெயரில் பெயரளவுக்கு இயங்கும் சுத்திகரிப்பு நிலையமானது இன்று ரசாயன கழிவு நீரை பாலாற்று வெள்ளத்தில் கலந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இந்த தகவலை அறிந்த போலிசார் அங்கு வந்தனர், ஆனால் ஏனோ தெரியவில்லைஅருகில் உள்ள மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.
இது குறித்த விவரம் வருமாறு,
ஆம்பூர் அருகே பாலாற்றில் செத்து மிதக்கும் மீன்கள். தோல் தொழிற்சாலை கழிவு கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் கால்நடைகள் கூட தண்ணீரை குடிப்பதில்லை என விவசாயிகள் வேதனை. பாலாறு பாழாவதை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது மழை நீரில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதாகவும் இதனை தடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் வாடிக்கையாக மாறி உள்ளது.
இந்நிலையில் இன்று மாராப்பட்டு பாலாற்றில் செல்வம் நீரானது கருப்பு நிறத்தில் நிறம் மாறி துர்நாற்றத்துடன்நோடியது .
இதனால், ஆற்று நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது.
ஆகவே நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தோல் கழுவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்க விடப்படுவதே இதற்கு காரணம் என பொதுமக்கள் கதறுகிறார்கள்.
இந்நிலையில் பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி திடீரென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பலமணிநேரமாகியும் தப்பி தவறிக்கூட மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் அந்த பக்கமே வரவில்லை.
இது குறித்து அப்பகுதி விவசாயியான சரவணன் என்பவர் கூறுகையில், ரசாயன கழிவு நீரை சுத்திகரிக்க அதிகம் செலவு ஆவதால் இங்குள்ள வாணிடெக் சுத்திகரிக்காமல் தண்ணீரை பாலாற்றில் கலந்துவிடுகிறார்கள்.
குறிப்பாக வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் சுத்திகரிப்பு ஆலையில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக மழைக்காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் கால்நடைகள் கூட ஆற்று நீரை பருகுவதில்லை எனவும் தங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலரும் நோய்வாய் பட்டுள்ளதாகவும் பாலாறு தொடர்ந்து பாழாக்கப்பட்டு வருவதை அரசு தடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.