தேர்தலில் போட்டியிட கூட ஜனநாயகமில்லை வேட்பாளர்களை மிரட்டுகின்றனர்-எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தேர்தலில் போட்டியிட கூட ஜனநாயகமில்லை வேட்பாளர்களை மிரட்டுகின்றனர்-எடப்பாடி பழனிசாமி பேச்சு!


ஜி.கே.சேகரன்.

திமுக ஆட்சியில் தேர்தலில் போட்டியிட கூட ஜனநாயகமில்லை, வேட்பாளர்களை மிரட்டுகின்றனர் வேட்புமனுக்களை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து நிராகரிக்க செய்கின்றனர்  - திமுகவால் மக்களையும் தேர்தலையும் சந்திக்க திராணியில்லை -திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது - காவல்துறையும் அதிகாரிகளும் தேர்தலில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - திமுக ஆட்சியில் தொடர்கொலைகள் நடக்கிறது - வேலூரில் அதிமுக

வேட்பாளர்களை ஆதரித்து கூட்டத்தில் - சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு .
   வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேலூர் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களாக போடியிடும் 58 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையில், வேலூர் மாநகராட்சியில் போட்டியிட அதிமுக சார்பில் 60 வார்டுக்களிலும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆனால் திமுகவினர் திட்டமிட்டு 2 பேரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்தனர். அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினோம் யார் வேட்பு மனு செய்தாலும் மனுக்கள் ஏற்றுகொண்டு தேர்தலை சந்தித்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடந்தது அதில் பல முறைகேடுகள் நடந்தது அதிமுகவினர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் ,வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததாக அறிவித் தனர். ஜனநாயக முறையில் நடக்காமல் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது அதிமுக திமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள் நான் முதல்வராக இருக்கும் போது நியாயபடி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி வெற்றியை நேர்மையாக நடுநிலையுடன்  அறிவித்தோம். வேலூர் மாநகராட்சியில் முறையாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் திட்டமிட்டு தள்ளுபடி செய்யபட்டுள்ளது . தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சி திமுக என்பது நிருபனமாகியுள்ளது, கொல்லை புறவழியாக மனுக்கள் நிராகரிக்க்படுகிறது திமுகவுக்கு தேர்தல் ஜுரம் பயம் வந்துவிட்டது. அதிமுக எதற்கும் அஞ்சாது மக்களிடம் நீங்கள் செல்வாக்குடன் வெற்றி பெறுவீர்கள் இன்றைக்கு திமுகவினர் பல விமர்சனங்களை செய்ததால் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளோம். வேட்பு மனுதாக்கல் வாக்குபதிவு வாக்குபெட்டிகள் வைத்த அறை வாக்கு எண்ணிக்கை ஆகியவைகளை நேரடியாக வீடியோ பதிவு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதில் தவறு நடந்தால் நீதிமன்றத்தை நாடி வெல்லுவோம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் திமுகவினர் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். காவல்துறையும் அரசு அதிகாரிகளும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நிச்சயம் ஆட்சிமாற்றம் வரும் அப்போது நல்லவர்க்ளுக்கு நல்லது நடக்கும் காவல்துறை தரம் தாழ்ந்து செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்துறை மக்களை இன்றைக்கு அச்சுறுத்துகிறது ஸ்டாலின் காவல்துறையை முதல்வராகியவுடன் ஆட்டிபடைக்கிறார். நீதி தர்மத்தை காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும். சக்கரம் சுழன்று கொண்டுள்ளது சக்கரம் மேலே வந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது 9 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் ஏராளம். எல்லாத்துறையிலும் ஊழல் மக்களை காப்பாற்ற் ஆட்சியில் கொள்ளையடிக்கவே ஆட்சி .9 மாதகாலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை அதிமுக திட்டங்களுக்கு முதல்வர் தற்போது அடிக்கல் நாட்டுகிறார். அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்து வாக்குசேகரிப்பார்கள் ஆனால் திமுக கட்சிகாரர் ஒருவ்ர் கூட நியாய விலைகடைப்பக்க்ம் போக முடியாது. பொங்கல் தொகுப்பில் 500- கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது .ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ.2500 பணம் பொங்கல் பரிசை தரமாக வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் தரமற்ற கோதுமை அரிசி வெல்லம் ஒழுகுகிறது ஸ்டாலின் ஒரு தம்படி காசு கூட மக்களுக்கு பொங்கலுக்காக தரவில்லை. ஸ்டாலின் இந்தியாவில் முதன்மை முதலமைச்சர் என்று கூறுகிறார்கள். அவரிடம் ஒழுகும் வெல்லத்தை காட்டுங்கள் சட்டம் ஒழுங்கு அடியோடு இல்லை எங்கு பார்த்தாலும் கொலைகள் நடக்கிறது ஆனால் ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்கிறார் உடற்பயிற்சி செய்கிறார் .அவர் ஒரு விளம்பர பிரியர் தினந்தோறும் பத்திரிகை தொலைக்காட்சிகளில் வரவேண்டும் என நினைகிறார் என்று பேசினார்.