ஐஸ்வர்யா ராய் போல கண் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க!! பரிந்துரைத்த அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் போல கண் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க!! பரிந்துரைத்த அமைச்சர்!!
டி.இ.முகமது,
ஐஸ்வர்யா ராய் போல கண் வேண்டுமா? மீன் சாப்பிடுங்க என்று பரிந்துரைத்த அமைச்சரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய்குமார் காவித். இவர் நந்தூர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "மக்களே.. உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என மாமிச வகைகளை அதிகம் சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. ஆனால், மீன் அப்படி அல்ல. மீன் இறைச்சியில் கொழுப்பு கிடையாது என்பதால் அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
நீங்கள் பிறரை கவர வேண்டுமானாலும் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும். ஏன் தெரியுமா..? நடிகை ஐஸ்வர்யா ராய் தினமும் மீன் சாப்பிடுவார். அவர் மங்களூரில் கடலுக்கு அருகே வசித்து வந்தவர். அதனால் அவரது உணவில் தினமும் மீன் இருக்கும். அப்படி அவர் மீன் சாப்பிட்டதால் தான் அவரது கண்கள் அத்தனை கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கின்றன. எனவே, நீங்களும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்கள் உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் கண்கள் பிறரை கவர்ந்திழுக்கும்" என அமைச்சர் விஜய்குமார் காவித் பேசினார்.