வாலிபால் விளையாடலாம் வாங்க! ஆட்சியர் அழைப்பு!

ஆர்.ரமேஷ்,
இன்று தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடுதல் முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் / திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு விடுத்தார்,.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு பிரிவில், தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடிடும்பொருட்டு, இன்று காலை 8.00 மணி முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக ஆடவர் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.
19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கு கையுந்துபந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம், 45 வயதிற்குட்பட்ட ஆடவருக்கு 100 மீட்டர் ஓட்டம், மகளிருக்கு 50 மீட்டர் ஓட்டம், ஆகிய விளையட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. எனவே, மேற்படி விளையாட்டுப்போட்டிகள் மேற்படி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.