தமிழகம் வரும் பிரதமருக்கு 1000 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு!

உ.சசிகுமார்,
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திவரும் "என் மண் என் மக்கள்" என்கிற பாதை யாத்திரையின் நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற இருப்பதினால் அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அதற்காக திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதாபூர் முத்துக்குமாரசாமி மலை அருகே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பொதுக்கூட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கின்றார்.
இந்நிலையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது, இந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் 10 லட்சம் பேர், பொதுமக்கள் மூன்று லட்சம் பேர் என சுமார் 13 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையிலும் 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டம் மைதானமும், வாகனம் நிறுத்துமிடம் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 1000 ஏக்கர் நிலத்தில் ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.