துபாய் நாட்டு நகை பெயரில் மோசடி!

துபாய் நாட்டு நகை பெயரில் மோசடி!

 ஜி.கே.சேகரன்,

துபாய் நாட்டு நகைகள் இருப்பதாக கூறி காலணி தொழிற்சாலை தொழிலதிபரை ஏமாற்றி 80 லட்சம் மோசடி செய்த நபர் கைது. திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை..

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கலீலூர் ரஹ்மான், காலணி தொழிலதிபருமான இவரிடம் கடந்த மார்ச் மாதம், பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த தப்ரேஷ் அஹமது என்பவர் பிசினஸ் ஒன்றை பற்றி கூறியிருக்கிறார்.

  அதில் தன்னிடம் துபாய் நாட்டு தங்க நகைகள் உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார், இதனை நம்பிய தொழிலதிபர் கலீலூர் ரஹ்மான்தப்ரேஸ் அஹமதுவிடம் 80 லட்சம் ரூபாயை அளித்துள்ளார், அதனை வாங்கிகொண்டு தப்ரேஸ் அஹமது தலைமறைவாகிய நிலையில், இதுகுறித்து, கலீலூர் ரஹ்மன் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

 இந்நிலையில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த தப்ரேஷ் அஹமதுவை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.