கொலை செய்துவிட்டு  டிராக்டர் கவிழ்ந்து விபத்து என நாடகம்! போலிஸ் புலன் விசாரணையில் உண்மை அம்பலம்!

கொலை செய்துவிட்டு  டிராக்டர் கவிழ்ந்து விபத்து என நாடகம்! போலிஸ் புலன் விசாரணையில் உண்மை அம்பலம்!

 ஜி.கே.சேகரன்,

  ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு  டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக   நாடகமாடியவர் நபர் கைது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு  சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 பின்னர் போலீசார் இதனை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

 அதன் பின்னர் வந்த பிரேத பரிசோதனையின் அறிக்கையில் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து  போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  உதயகுமாரின் மூத்த சகோதரரான சிவக்குமாருக்கும் உதயகுமாருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அவ்வப்போது மோதல்  ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் சிவகுமாருக்கும் உதயகுமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த சிவகுமாரின் மகன் மணிகண்டன் (33) உதயகுமாரை  தாக்கியதலில்  உதயகுமார்  உயிரிழந்துள்ளார். இதை  அறிந்த மணிகண்டன், உதயகுமாரை டிராக்டரில் அமர வைத்து, டிராக்டரை கீழே தள்ளிவிட்டு, விபத்து ஏற்பட்டு இறந்தது போல சித்தரித்து நாடகமாடியது தெரியவந்தது.

 இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த ஆலங்காயம் போலீசார், வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.