ஊராட்சி சந்தையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புது குடியானூரில் 2019 - 20 ஆம் ஆண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 42 லட்சம் மதிப்பில் 32 கடைகள் கொண்ட வாரச்சந்தை திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சசிகலா கார்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கும் ஊராட்சி பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்த வார சந்தையில் அப்பகுதி விவசாய மக்கள் ,சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தனர்.