அ.தி.மு.க.5 லட்சம் கோடி கடன் வைத்தவர்கள்! அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

கு.அசோக்,
கடந்த ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்தவர்கள் தற்போது நகர்புற தேர்தலில் எப்படி வாக்கு கேட்கிறார்கள் என தெரியவில்லை என வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் பேச்சு.
திருப்பத்தூர்மாவட்டம்,வாணியம்பாடியில் நகர்புற தேர்தலையொட்டி திமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதில், வாணியம்பாடி நகராட்சி மற்றும் ஆலங்காயம் பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, எதிர்கட்சியினர் நம்மை ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என குறைசொல்லியே வாக்கு கேட்பார்கள்.
ஆனால் அவர்கள் 5 லட்சம் கோடி கடன் வைத்து சென்றது அவர்களுக்கு தெரியாது.
பட்ஜெட் போட்டு தான் பணம் கொடுப்பார், நிச்சயமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பார் முதல்வர்.
நாம் சொல்லததையும் செய்து காட்டிக்கொண்டிருக்கின்றோம் அதை நீங்கள் உங்கள் பகுதயில் சொல்லி வாக்கு கேளுங்கள்,
தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை நம் கட்சியின் மூலம் தான் தீர்க வேண்டும் என உறுதியுடன் தேர்தலில் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என பேசினார்.
¢ இக்கூட்டத்தில் திமுகவினர் திரளானோர் கலந்துகொண்டனர்.