ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சா! ஒருவர் கைது!!

கு.அசோக்,
ஒசூருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய நபரை காட்பாடி ரயில் நிலையத்தில் பிடித்து அவனிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் விடியற்காலை ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சீட்டுக்கு அடியில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 பண்டல்கள் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அவைகளில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இதனை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த அபிஷேக் குடி (23) என்பவரை கைது செய்தனர்.
அவர் தனது சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திலிருந்து தான் பணிபுரியும் தமிழகத்தின் ஒசூருக்கு 14 கிலோ கஞ்சாவை கடத்துவதை அவர் ஒப்புகொண்டதால் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.